sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை அமைக்காததால் பழவூரில் அவதி

/

ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை அமைக்காததால் பழவூரில் அவதி

ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை அமைக்காததால் பழவூரில் அவதி

ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை அமைக்காததால் பழவூரில் அவதி


ADDED : ஏப் 24, 2024 01:25 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை கிராமத்திற்கு செல்லும், 3.6 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.

இந்த சாலையை கன்னிமங்கலம், கரிக்கந்தாங்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்ததால், சாலையை சீரமைக்க 2023ம் ஆண்டு ஜன., 30ம் தேதி, 5.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின், ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. மேடு பள்ளங்களை சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு ஒரு மாதமாகியும் தார் சாலை அமைக்கப்படாமல், பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

அதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லியில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், சாலையில் புழுதி பறப்பதால் அவ்வழியே செல்லும் அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us