sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் உலாவும் மாடுகள் மண்ணிவாக்கத்தில் அபாயம்

/

சாலையில் உலாவும் மாடுகள் மண்ணிவாக்கத்தில் அபாயம்

சாலையில் உலாவும் மாடுகள் மண்ணிவாக்கத்தில் அபாயம்

சாலையில் உலாவும் மாடுகள் மண்ணிவாக்கத்தில் அபாயம்


ADDED : ஏப் 29, 2024 04:30 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில், அதிக அளவில் மாடுகள் உலா வருகின்றன.

குறிப்பாக, ஓட்டேரி காவல் நிலையம் அருகில், மண்ணிவாக்கம் அரசு பள்ளி எதிரில் என, சாலையின் இருபுறமும் மாடுகள் உலா வருவதுடன், சாலையில் நிரந்தரமாக தங்கியும் உள்ளன. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர்.

மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலையில், வண்டலுாரில் இருந்து படப்பை, வாலாஜாபாத், காஞ்சிபுரம் நோக்கி, செல்லும் வாகனங்களும், காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்களும் சென்று வருகின்றன.

தொடர்ந்து, பல நாட்களாக சாலையில் மாடுகள் நிரந்தரமாக படுத்திருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள மாடுகளை அப்புறப்படுத்தி, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us