sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

50 வயதானவரை தாக்கிய வழக்கு மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை

/

50 வயதானவரை தாக்கிய வழக்கு மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை

50 வயதானவரை தாக்கிய வழக்கு மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை

50 வயதானவரை தாக்கிய வழக்கு மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை


ADDED : ஏப் 01, 2024 02:34 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, காசிமேடு அருகே, திருட வந்ததாக நினைத்து, 50 வயதான நபரை கட்டி வைத்து தாக்கிய வழக்கில், மூன்று பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம்,38. விவசாய கூலியான இவர், ஊரில் போதிய வேலை இல்லாததால், கடந்த 2018 ஜூன் 29ம் தேதி, சென்னை காசிமேடில் மீன்பிடி தொழில் செய்துவரும் தன் சித்தப்பா தனகிருஷ்ணனை பார்த்து, வேலை கேட்க வந்துள்ளார்.

அன்றைய தினம் இரவு, காசிமேடு புதிய மீன் ஏலம் விடும் கூடம் அருகே இருந்த விசைப்படகில் துாங்கி உள்ளார். நள்ளிரவில் திருட வந்ததாக நினைத்து, 50 வயதான நபரை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் படகில் கட்டி வைத்து பலமாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து ராமஜெயம் அளித்த புகாரின்படி, மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில்,'விசைப்படகில் இருந்த பொருட்களை திருட வந்ததாக நினைத்து, 50 வயதான ஜெரால்டு என்பவரை, காசிமேடு பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார்,39, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்,38, திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா,28, ஆகிய மூன்று பேரும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரிந்தது. பின், மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட 21வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.லட்சுமி ரமேஷ் முன் நடந்தது.

போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.சுரேஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,'மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்களுக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இறந்தவருக்கு இழப்பீடாக, 6 லட்சம் ரூபாயை, அரசு வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us