sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

புதிய நாயகன் சஷாங்க் சிங்

/

புதிய நாயகன் சஷாங்க் சிங்

புதிய நாயகன் சஷாங்க் சிங்

புதிய நாயகன் சஷாங்க் சிங்


ADDED : ஏப் 05, 2024 11:20 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் தவறுதலாக வாங்கப்பட்ட சஷாங்க் சிங், பஞ்சாப் அணியின் 'ஹீரோ' ஆனார்.

இந்தியாவில் 17வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இதற்கான வீரர்கள் 'மினி' ஏலம் கடந்த டிசம்பரில் நடந்தது. இதில் சஷாங்க் சிங் என்ற பெயரில் 19, 32 வயது என இரு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 19 வயது சஷாங்க் சிங்கை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்த பஞ்சாப் அணி, தவறுதலாக 32 வயது சஷாங்க் சிங்கை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. வீரரை ஒப்பந்தம் செய்த பின் மாற்றிக் கொள்ள முடியாது என்பதால் பஞ்சாப் அணி இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி (200/7, 19.5 ஓவர்) 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை (199/4, 20 ஓவர்) வென்றது. பேட்டிங்கில் அசத்திய சஷாங்க் சிங் 29 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 61 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இவரை பஞ்சாப் அணியின் சக உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தா பாராட்டியுள்ளார்.

சஷாங்க் சிங் கூறுகையில், ''பேட் செய்ய களமிறங்கிய போது என்னை சிறந்த வீரராக கருதினேன். உரிமையாளர்கள், பயிற்சியாளர் குழுவினர் அளித்த ஆதரவு தன்னம்பிக்கையை அதிகரித்தது,'' என்றார்.






      Dinamalar
      Follow us