/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்டையில் விழுந்து தொழிலாளி சாவு
/
குட்டையில் விழுந்து தொழிலாளி சாவு
ADDED : ஏப் 05, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் குட்டையில் விழுந்து பனை ஏறும் தொழிலாளி உயிரிழந்தார்.
காரைக்கால், கோட்டுச்சேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது இளைய மகன் கிருஷ்ணராஜ், 24; பனை ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் வெளியே சென்ற கிருஷ்ணராஜ் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குட்டை தண்ணீரில் கிருஷ்ணராஜ் இறந்த நிலையில் மிதந்தார்.
இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

