/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
/
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
ADDED : டிச 29, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வில்லியனுார் அடுத்த சுப்ரமணிய சிவா நகரை சேர்ந்தவர் ஆனந்த் லுார்துசாமி, 54; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர், திடீர் என மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் லுார்துசாமி நேற்று இறந்தார்.
இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

