ADDED : டிச 30, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில், வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.
பண்ருட்டியை சேர்ந்தவர் உத்திரவேல், 37; இவர் புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி, 27; இவர் அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி, கணவன், மனைவிக்கும் இடையில் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மறுநாள் உத்திரவேல் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி காணாவில்லை . உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடை க்கவில்லை.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

