sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி

/

பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி

பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி

பொதுப்பணித்துறை தேர்வு உண்மை நிலை என்ன? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி


ADDED : நவ 02, 2024 06:15 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை எழுத்து தேர்வில் வெளியிடப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் வெற்றி பட்டியல்களின் உண்மை நிலையை வெளியிட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர், ஓவர்சீர் பணிக்கு, 168 இடங்களை நிரப்ப முதல் மற்றும் இரண்டாம் தாள் என மொத்தம், 194 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில், 30 சதவீத மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வு எழுதிய, 1,551 பேரில், 26 பேர் மட்டும் வெற்றி பெற்றதாக அரசு முதலில் அறிவித்தது. இந்த பட்டியல், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், தேர்வு செய்யப்பட்ட, 26 பேருடன் 'மெரீட்' அடிப்படையில் புதிதாக, 142 பேரையும் சேர்த்து, 168 பேர் கொண்ட திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இரு தாள்களுக்கும் சேர்த்து, 30 சதவீத தேர்ச்சி மதிப்பெண், 58.20 என நிர்ணயிக்கப்பட்டதை, 100 சதவீதத்திற்கும் அதே மதிப்பெண்களாக கணக்கிட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.

தேர்வு எழுதியவர்களில் அதிகம் பேர் வெற்றி பெறாததால், மதிப்பெண் மாற்றி அமைக்கப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட முதல் வெற்றி பட்டியல், இரண்டாம் வெற்றி பட்டியல் உள்ளிட்டவைகளில் உண்மை நிலைமைகளை தலைமை செயலாளர் மக்களுக்கு தெளிவான அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இவர் அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us