/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு கவர்னர், முதல்வருடன் சந்திப்பு
/
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு கவர்னர், முதல்வருடன் சந்திப்பு
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு கவர்னர், முதல்வருடன் சந்திப்பு
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு கவர்னர், முதல்வருடன் சந்திப்பு
ADDED : மார் 13, 2024 06:52 AM
புதுச்சேரி : புதுச்சேரிக்கு வருகை புரிந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கவர்னர் மற்றும் முதல்வரை சந்தித்து கலந்துரையாடினர்.
பாரத் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரோகித் ஜம்வால் தலைமையில், புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி பெற்ற, 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வருகை தந்தனர்.
இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று கவர்னர் தமிழிசையை, கவர்னர் மாளிகையில் சந்தித்து உரையாடினர். அதேபோல முதல்வர் ரங்கசாமியை, சட்டசபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மேலும், முதல்வரிடம் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.

