/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவெண்பா விழா
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவெண்பா விழா
ADDED : டிச 29, 2025 05:51 AM

வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கடந்த 25ம் தேதி திருவெண்பா விழா துவங்கியது.
தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் மாணிக்க வாசகர் விழாவில் தினசரி காலையில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் கோவில் உள் வளாக புறப்பாடு நடந்து வருகிறது.
தினசரி ஒரு அலங்காரத்தில் வாகனத்தில் மாணிக்கவாசகர் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று நான்காம் உற்சவத்தில் காலை 6:00 மணியளவில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாணிக்கவாசகர் சுவாமிகள் பூத வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது.
9ம் நாள் விழாவாக வரும் 2ம் தேதி சுந்தரமூர்த்திநாயனாருக்கு சிறப்பு அபிேஷகம், இரவு வெள்ளை சாத்துபடி தரிசனமும் நடக்கிறது. 10ம் நாள் உற்சவமாக 3ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர், சிவாச்சார்யர்கள், சிவனடியார்கள் செய்து வரு கின்றனர்.

