நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அளவுக்கு அதிகமாக குடித்த முதியவர் பரிதபமாக இறந்தார்.
புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே.நகர் 6 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பரமணி 70, இவர் நேற்று மதியம் 2 மணியளவில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, ரெட்டியார்பாளையம் குண்டுசாலை சாலையோரத்தில் மயங்கி கிடந்தார்.
இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் சுப்பரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

