/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடக்கிறது
/
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடக்கிறது
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடக்கிறது
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடக்கிறது
ADDED : அக் 11, 2024 05:57 AM
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மற்றும் கோர்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் இணைந்து நடத்தும், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை நடக்கிறது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, லட்சுமி பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள என்.எஸ். போஸ் மகாலில் நாளை 12ம் தேதி காலை 7.00 முதல் 9:30 மணி வரை நடக்க உள்ள நிகழ்ச்சியில், 2.5 மற்றும் 3.5 வயதுள்ள மழலைகளின் விரல் பிடித்து கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் 'அ -ஆ' எழுதி பழக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 'ஸ்கூல் கிட்' பரிசாக வழங்கப்படும்.
விஜயதசமி திருநாள், கல்வி கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள்.
இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முன்பதிவு செய்தவர்கள் நாளை காலை 7:00 மணிக்குள், விழா அரங்கிற்கு தங்கள் செல்லக்குழந்தைகளை அழைத்து வாருங்கள்.

