sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய... வழிகாட்டுகிறது மாவட்ட தொழில் மையம்

/

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய... வழிகாட்டுகிறது மாவட்ட தொழில் மையம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய... வழிகாட்டுகிறது மாவட்ட தொழில் மையம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய... வழிகாட்டுகிறது மாவட்ட தொழில் மையம்


ADDED : அக் 11, 2024 06:04 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் உள்ள பராம்பரிய கிராமப்புற மற்றும் நகர்புற கைவினைஞர்கள், கைவினை தொழிலாளர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக கொல்லர், பொற்கொல்லர், குயவர், தச்சர், சிற்பி உள்பட பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை உள்ளடக்கிய 18 விஸ்வகர்மா சமுதாயத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது. நகர பகுதியில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது கிராமங்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய மாவட்ட தொழில் மையம் வழிகாட்டுகிறது.

இணைவது எப்படி

இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் பொது சேவை மையத்தினை மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு சரிபார்ப்பிக்கு பின் பயனாளிகளுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் அடையாள அட்டை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இ-வவுச்சர் மூலம் 15 ஆயிரம் ரூபாய் அடைப்படை பயிற்சி நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் உதவித் தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

என்ன நன்மை

பயிற்சிக்கு பிறகு கைவினை கலைஞர்களுக்கு முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வட்டியுடன் வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதனை தவணை முறையில் 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இத்தொகையினை 30 மாத தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி இலவசமாக பதிவேற்றம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் பொதுமக்கள் எவரிடரும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

விஸ்வகர்மா சமுதாயத்தினர் அளப்பரிய திறமை, படைப்பாற்றல் மற்றும் கைவினை நுட்பம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட அவர்களுக்கு நவீன பயிற்சியும் மூலவளங்களும் கிடைப்பது இல்லை.

இந்தத் திட்டத்தின் வாயிலாக அந்த இடைவெளியை நிரப்பப்படுவதோடு, இன்றைய போட்டி உலகை எதிர்கொள்ளவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேகங்களுக்கு தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகம் அல்லது 0413-2248391,2249392, என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us