/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
/
மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 08, 2024 03:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ராகினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், பாகூர், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கத்தில் மாணவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 4ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லுாரி மாணவியர், விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் சேர, புதுச்சேரியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும் தகவலுக்கு 0413 2247830 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

