தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி வீதியுலா

செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி வீதியுலா

செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி வீதியுலா


ADDED : மே 22, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 03:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

வில்லியனுார் அடுத்த குருவப்பநாயக்கன்பாளையம், செல்லமுத்து மாரியம்மன் கோவில் 18 ம் ஆண்டு பிரமோற்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. இரவு செல்லமுத்து மாரியம்மன், பிரத்தியங்கராதேவி, வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 27ம் தேதி செடல் உற்சவம், 28 ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us