/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் 'அபேஸ்'
/
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் 'அபேஸ்'
ADDED : டிச 29, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரின், மொபைல் போனிற்கு மர்ம நபர் ஒருவர் ஆர்.டி.ஓ., இ-செல்லான் லிங்கை அனுப்பினார். இதை உண்மையென நம்பிய அவர், மர்ம நபர் அனுப்பிய லிங்கை ஓபன் செய்து, அதில் தனது விவரங்களை உள்ளீடு செய்தார்.
பின் அவரது வங்கி கணக்கி ல் இருந்து 66 ஆயிரத்து 89 ரூபாய் மாயமானது. இதேபோல் ஏரிப்பாக்கத்தை சேர்ந்த நபர், 59 ஆயிரம் ரூபாய். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஆயிரம் ரூபாய். மூலக்குளம் பெண் 34 ஆயிரத்து 951 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

