ADDED : மார் 16, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் கடன் பிரச்னையால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாகண் ணு, 42; தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் கம்பெனியில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு, கண்ணியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ம கள் உள்ளனர்.
ரா ஜாகண்ணு கடன் பிரச்னை காரணமாக கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற ராஜாகண்ணு, கம்பெனி வளாகத்தில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
