ADDED : நவ 13, 2024 08:56 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்; தவளக்குப்பத்தில், டி.பி.எல்., பிரீமியர் லீக் கிரிக்கெட்போட்டிக்கான ஏலம், டிச., 1ம் தேதி நடக்கிறது.
தவளக்குப்பத்தில், டி.பி.எல்., 3ம் ஆண்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கிறது. அதற்கான ஏலம் டிச., 1ம் தேதி தவளக்குப்பத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில், தவளக்குப்பம், இடையார்பாளையம், நல்லவாடு, பூரணாங்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றனர்.
போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை ஏலம் மூலம், தேர்வு செய்வர். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். நிகழ்ச்சிகளை, யூ.டியூப் மற்றும் தொலைக் காட்சியில் நேரடி ஒளிப்பரப்படுகிறது என, பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தும் உரிமையாளர் உதயா தெரிவித்துள்ளார்.
