sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்

/

மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்

மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்

மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்


ADDED : பிப் 28, 2024 07:22 AM

Google News

ADDED : பிப் 28, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் கிராம மெயின் ரோட்டில், பொதுப்பணித்துறை மூலம் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையின் ஒருபுறம் அகலப்படுத்தப்பட்டு 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதியில், சாலையின் நடுவே உள்ள 4 மின்கம்பங்கள் அகற்றப்படாமல் பொதுப்பணித்துறை மூலம், தார்சாலைக்கும், புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலுக்கும் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல், சாலை அமைக்கப்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓடிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, சந்தை புதுக்குப்பம் மெயின் ரோட்டில் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை விபத்து ஏற்படும் முன் மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us