/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதாரமற்ற குற்றம் சாட்டினால் நடவடிக்கை: மாஜி முதல்வருக்கு நமச்சிவாயம் எச்சரிக்கை
/
ஆதாரமற்ற குற்றம் சாட்டினால் நடவடிக்கை: மாஜி முதல்வருக்கு நமச்சிவாயம் எச்சரிக்கை
ஆதாரமற்ற குற்றம் சாட்டினால் நடவடிக்கை: மாஜி முதல்வருக்கு நமச்சிவாயம் எச்சரிக்கை
ஆதாரமற்ற குற்றம் சாட்டினால் நடவடிக்கை: மாஜி முதல்வருக்கு நமச்சிவாயம் எச்சரிக்கை
ADDED : பிப் 18, 2025 06:24 AM
புதுச்சேரி: 'எதற்கும் ஒரு எல்லை உண்டு, நாங்கள் பேச ஆரம்பித்தால் நீங்க தாங்க மாட்டீர்கள்' என மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறியதாவது;
கடந்த 14ம் தேதி தனியார் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தகவல் வந்ததும், போலீசார் யாருடைய தலையீடும் இன்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தனர்.
சில அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக உள்நோக்கத்துடன் அரசு மீது கலங்கம் கற்பிக்க அரசியல் செய்கின்றனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம் நடப்பதாகவும், அதில் என்னை, முதல்வர், சபாநாயகரை சம்பந்தப்படுத்தி மாஜி முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார். தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான நாராயணசாமி ஆட்சியில், 413 பெண்களுக்கு எதிரான குற்றங்களும், 366 போக்சோ வழக்கும், 47 பாலியல் பலாத்கார வழக்கும், 174 கொலை, 131 கொலை முயற்சி, 222 செயின் பறிப்பு, 94 வழிப்பறி, 24 கொள்ளை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளது.
அவரது ஆட்சியில் எதுவும் நடக்காதது போல், ரங்கசாமி ஆட்சியில் நடக்கிறது போல் தவறான தகவல் பரப்புகிறார்.
முதல்வராக, மத்திய அமைச்சராக இருந்தவர் தரம் தாழ்ந்து பேசுவதை கண்டிக்கிறேன். நாங்கள் பேச ஆரம்பித்தால் நீங்க தாங்க மாட்டீர்கள். குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறினால் சட்டப்படி நீதிமன்றம் அணுகி வழக்கு பதிவு செய்யப்படும். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
சிறுமி பாலியல் வழக்கு பொறுத்தவரை உண்மையா, தவறா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.
மூடப்பட்ட அப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளியில் செய்முறை தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

