/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வெல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
போர்வெல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 11, 2025 11:14 PM

புதுச்சேரி:முதலியார்பேட்டை தொகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க போர்வெல் அமைக்கும் பணியை துவக்கப்பட்டுள்ளது.
முதலியார்பேட்டை தொகுதி, சுதானா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க, முருங்கப்பாக்கம் ஏரிக்கரையின் கிழக்கு பகுதி அணைக்கரையில் புதிய ஆழ்துளைக் கிணறு, நீர் உந்து மோட்டார் அமைக்கும் பணி, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பணியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தலைமைப்பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொது சுகாதாரக்கோட்ட உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்வாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.