sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரும்பு பட்டறை உரிமையாளர் சம்மட்டியால் அடித்து கொலை

/

இரும்பு பட்டறை உரிமையாளர் சம்மட்டியால் அடித்து கொலை

இரும்பு பட்டறை உரிமையாளர் சம்மட்டியால் அடித்து கொலை

இரும்பு பட்டறை உரிமையாளர் சம்மட்டியால் அடித்து கொலை


ADDED : செப் 23, 2025 06:28 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்; வில்லியனுாரில், இரும்பு பட்டறை உரிமையாளரை சம்மட்டியால் அடித்து கொன்றவரை போலீசார் தேடுகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த உறுவையாறைச் சேர்ந்தவர் வேதகிரி, 61; கணுவாப்பேட்டையில் இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு இரு மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலை, வேதகிரி தலையில் பலத்த காயங்களுடன் இரும்பு பட்டறையில் இறந்து கிடந்தார். அருகில், ரத்த கறை படிந்த சம்மட்டி கிடந்தது. வில்லியனுார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேதகிரி பட்டறை நடத்தி வரும் இடத்தை, அவரது மூத்த மகளின் கணவர் ஆறுமுகம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வேதகிரியை ஆறுமுகம் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, ஆறுமுகம் தலைமறைவாகி இருப்பதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அமுதா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us