sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்

/

 சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்

 சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்

 சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்


ADDED : டிச 24, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், சுடு களிமண் கைவினை பொருள் ஒரு மாதம் பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.

இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், கைவினை அபிவிருத்தி ஆணையம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி ஒரு மாதம் வில்லியனுார் பொறையூரில் நடக்க உள்ளது. இதில் தலைமை கைவினை கலைஞர் வெங்கடேசன் தலைமையில் கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டு புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பயிற்சி நுணுக்கங்கள் அளிக்க உள்ளனர்.

இதில் கலந்துக்கொள்ளும் கைவினை கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 வீதம், மாதம் ரூ.7,500 உதவித் தொகை அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

இதன் துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயிற்சியினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சாரங்கபாணி, கைவினை அபிவிருந்தி ஆணையம் உதவி இயக்குனர் ரூப்சந்தர், கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us