நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தட்டாஞ்சாவடியில் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தட்டாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி இந்திரா, 50; கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பாஸ்கர் இறந்து விட்டார். அவரது இறப்பிற்கு பிறகு இந்திரா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 3:00 மணிக்கு ஹாலில் படுத்திருந்த இந்திரா திடீரென மாயமானார். அவரது மகள் பவித்ரா வெளியே சென்று பார்த்தபோது, வராண்டாவில் இந்திரா துாக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இந்திராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

