sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 28, 2024 07:23 AM

Google News

ADDED : பிப் 28, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக, 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் மரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சிவகுரு 41: என்பவர் உச்சிமேடு ஏரியை ஏலம் எடுத்துள்ளார். இந்நிலையில், கோவில் நிர்வாக பொறுப்பில் உள்ள அதே பகுதியை சேர்ந்த அய்யனார், கடந்த 25ம் தேதி சிவகுருவிடம் ஏலத் தொகையை கேட்டுள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து சிவகுரு அளித்த புகாரில், அய்யனார், அவரது சகோதரர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 6 பேர் மீதும், அய்யனார் அளித்த புகாரில், சிவகுரு உள்ளிட்ட நான்கு பேர் மீதும் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us