ADDED : ஜன 05, 2026 04:31 AM

திருக்கனுார்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள், சுத்துக்கேணி கிராமத்தில் மாடி தோட்டம் அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள் காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சி வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் தலைமையின் கீழ் நடக்கிறது.
இதில், மாணவிகள் பவித்திரா பூழியில், பிரித்தி சுப்ரஜா, என். பிரியதர்ஷினி, டி.பிரியதர்ஷினி, பி.பிரியதர்ஷினி, பிரியங்கா, ராகவி, ராமலெட்சுமி, சபிதா, சஹானா உள்ளிட்டோர் காட்டேரிக்குப்பம் வருவாய் கிராமமான சுத்துகேணியில் ராமனுஜம் என்பவரின் வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான செயல்முறை விளக்கம் அளித்தனர்.
