sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிராந்திய மொழி தேர்ச்சி பெற்றோரை பணியமர்த்த எம்.பி., வலியுறுத்தல்

/

பிராந்திய மொழி தேர்ச்சி பெற்றோரை பணியமர்த்த எம்.பி., வலியுறுத்தல்

பிராந்திய மொழி தேர்ச்சி பெற்றோரை பணியமர்த்த எம்.பி., வலியுறுத்தல்

பிராந்திய மொழி தேர்ச்சி பெற்றோரை பணியமர்த்த எம்.பி., வலியுறுத்தல்


ADDED : பிப் 06, 2024 11:29 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிராந்திய மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை;

புதுச்சேரி உட்பட பல மாநில அரசுகள் சி.பி.எஸ்.இ., கல்வியை ஆரம்ப நிலையை ஆங்கில வழி கல்வியில் அறிமுகப்படுத்தி வருகின்றன.பிராந்திய மொழிகளில் சி.பி.எஸ்.இ., தரத்தில் பாட புத்தகங்கள் இல்லாததால், தமிழ் மீடியத்திற்கு மாற முடியவில்லை. தொடக்க கல்வி பிராந்திய மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என, மத்திய அரசு,மாநில நிர்வாகங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி விரிவுரையாளர், உள்ளூர் மொழிகளில் புலமை பெற்றவர்களாக பணியமர்த்த வேண்டும். உயர்நிலை பள்ளி முதல்வர், கல்லுாரி விரிவுரையாளர்கள் நியமனம் யூ.பி.எஸ்.சி., மூலம் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிஅமர்த்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு பிராந்திய மொழியில் கற்பிக்க போதிய பயிற்சி இல்லை.

எனவே, பிராந்திய மொழி தெரிந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய, பணி நியமன விதியில் திருத்தம் செய்ய வேண்டும்.பிராந்திய மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பிற உயர்கல்வி அமைப்புகள் ஆட்சேர்ப்பு விதிகளில் குறிப்பிட்ட மாற்றத்தை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us