sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உறுதி மொழி குழு தலைவர் பதவி நீக்கம் வரம்பு மீறிய செயல்: மா.கம்யூ., குற்றச்சாட்டு

/

உறுதி மொழி குழு தலைவர் பதவி நீக்கம் வரம்பு மீறிய செயல்: மா.கம்யூ., குற்றச்சாட்டு

உறுதி மொழி குழு தலைவர் பதவி நீக்கம் வரம்பு மீறிய செயல்: மா.கம்யூ., குற்றச்சாட்டு

உறுதி மொழி குழு தலைவர் பதவி நீக்கம் வரம்பு மீறிய செயல்: மா.கம்யூ., குற்றச்சாட்டு


ADDED : அக் 25, 2024 05:59 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, உறுதிமொழி குழுவின் தலைவர் பதவி நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது வரம்பு மீறிய செயல் என, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி முதல்வர் அறையில் சபாநாயகருக்கும், நேரு எம்.எல்.ஏ.,விற்கும் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் பதவியில் இருந்து, நேரு எம்.எல்.ஏ., நீக்கம் செய்யப்பட்டுள்ளது சட்டசபை அலுவலக விதிக்கு எதிரானது.

சபாநாயகர் செல்வம் வானளாவிய அதிகாரம் படைத்தவராக நடந்து கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, உறுதிமொழி குழுவின் தலைவர் நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது வரம்பு மீறிய செயல்.

மாநில முதல்வர் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. பா.ஜ., கூட்டணி ஆட்சியில் எதுவும் நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டசபையில் அமைச்சர்கள், சபைத் தலைவர், எம்.எல்.ஏ.,க்களுக்கான அதிகார வரம்பை ஒழுங்கு படுத்த முதல்வர் உரிய தலையீடு செய்ய வேண்டும்.

சபாநாயகர் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். சட்டசபை அலுவலக விதிக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us