/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

 அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

 அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

 அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

 அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

ADDED : மார் 01, 2026 04:57 AM


Google News
புதுச்சேரி: சின்ன சுப்பாரயப்பிள்ளை வீதி, அங்காளம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, சின்ன சுப்பாரயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் 3ம் தேதி வைத்திக்குப்பம் மாசிமக தீர்தவாரிக்கு, காலை 5:30 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு, 7:30 மணிக்கு வைத்திக்குப்பம் கடலில் தீர்த்தவாரியில் பங்கேற்கிறார்.

பின், அங்கிருந்து 9:00 மணியளில் புறப்பட்டு, நகரப் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வருகிறார். அதன்பிறகு இரவு 7:00 மணிக்கு பரிகார பூஜை செய்தபின், கோவில் வழக்கம் போல் திறந்து, பொது தரிசனம், அர்ச்சனை நடக்கிறது.

இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.