sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை

/

மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை

மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை

மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை


ADDED : நவ 06, 2024 06:59 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் படிக்க என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா, கன்வீனர் செர்லின் சிவம், மருத்துவ கலந்தாய்வு நோடல் அதிகாரி செவ்வேல் ஆகியோரிடம், சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் படிக்க, என்.ஆர்.ஐ., இடஒதுக்கீட்டில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் முறைகேடாக சேர்ந்த மாணவர்களை நீக்க வேண்டும். தகுதியான புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு காலியாகும் மருத்துவ இடங்களை கொடுக்க வேண்டும்.

இதில் முறைகேடாக சேர முயற்சித்த மற்றும் சேர்ந்துள்ள மாணவர் விபரங்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், சி.பி.ஐ., விசாணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us