ADDED : மே 09, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலை சந்திப்பில்,நேற்று முன்தினம் பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஓட்டி வந்த பைக்கிற்கு ஆவணங்கள் இல்லை எனத் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த பரத்குமார், 18, சூர்யா, 18, என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த பைக், ஈஸ்வரன் கோவில் பகுதியில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, பக்கை பறிமுதல் செய்தனர்.

