ADDED : ஜன 11, 2025 06:49 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பொது மக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
அப்போது தர்மாபுரி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவகுமார், 48, என்பவர் மூலகுளம் பகுதியில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
