sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்

/

 அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்

 அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்

 அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு எஸ்.பி.ஐ., வங்கியுடன் ஒப்பந்தம்


ADDED : டிச 27, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸ் துறை சம்பள கணக்குகளுக்காக, ஸ்டேட் பாங்குடன், புதுச்சேரி அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தலைமைச் செயலர் ஷரத் சவுகான், ஸ்டேட் பாங்கின் சென்னை வட்டாரத் தலைமை அலுவலக பொதுமேலாளர் ஹரிதா பூர்ணிமா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இணைச் செயலர் (நிதி) ரத்னா கோஷ் கிஷோர், கருவூலத்துறை இயக்குநர் ஷேக் மொய்தீன், துணைப் பொதுமேலாளர்கள் பாலானந்த், ஸ்மிதா எஸ். நாயர், புதுச்சேரி மண்டல மேலாளர் நடராஜன், புதுச்சேரி கிளையின் உதவிப் பொதுமேலாளர் அன்புமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மண்டல மேலாளர் நடராஜன், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களும் பயனடைந்திடும் வகையில் அறிவுறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்டேட் பாங்கில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ. 1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் மற்றும் ரூ. 10 லட்சம் உயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இலவசமாக வழங்குகிறது.

மேலும் புதிதாக சம்பளக் கணக்கு துவங்குபவர்களுக்கும் இச்சலுகைகள் பொருந்தும்.

மேலும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன், குடும்ப சேமிப்புக் கணக்கு எஸ்.பி.ஐ., ரிஷ்டே ஆகியவற்றுக்கான செயலாக்க கட்டணங்களில் சலுகை வழங்கப்படுகிறது. குடும்பத்திற்கு அதிகபட்சம் 4 நபர்களுக்கு (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் முதன்மை மேலாளர்கள் நந்தினி, பாலசுப்ரமணியண், ஹரிஷ், பார்த்தசாரதி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us