ADDED : பிப் 06, 2024 11:13 PM

புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ்., ஊழியர்களுக்கான 'பரிசோதனை வடிவமைப்புகள் மற்றும் சிக்கலுக்கான தீர்வு' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கத்தை எம்.ஐ.டி., கல்லுாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், லுாகாஸ் டி.வி.எஸ்., கம்பெனி தலைவர் சுரேஷ்குமார், மனித வள மேலாளர் அருண்குமார், தரமேலாளர் மகேஷ், மனித வள நிர்வாகி கணேஷ், இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராம் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
இப்பயிலரங்கத்தில் சாதிக் இஸ்மாயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். எம்.ஐ.டி., மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

