/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு
/
பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூராகவும், நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் பட்டாசு வெடித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மங்கலம் உதவி சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மங்கலம் - உறுவையாறு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், தீபாவளிக்கு நீதிமன்ற விதித்த நேரத்தை கடந்து பொது இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த, உறுவையாறு புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் 21, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

