தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலமரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

ஆலமரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

ஆலமரம் விழுந்து 3 வீடுகள் சேதம்


ADDED : நவ 29, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அருகே காற்றுடன் பெய்த கன மழையால், ஆலமரம் வேறுடன் பெயர்ந்து விழுந்த 3 வீடுகள் சேதமாகின.

வங்க கடலில் உருவாகி உள்ள பெங்கல் புயல் காரணமாக, புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று அதிகாலை காற்றுடன் பெய்த மழையால், பாகூர், வார்க்கால் ஓடை அடுத்த புதுநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் வேறுடன் பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது.

இதில், பரிமளாதேவி, விஜி,ஜீவா ஆகியோர் வீடுகள் சேதமாகின.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்த, பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பாகூர் கொம்யூன் பஞ்சாத்து, வருவாய் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வீடு சேதத்தை பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us