ADDED : பிப் 24, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் துர்கா கோவில் அருகே, ஒருவர் குடிபோதையில் நின்று, அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார். தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு சென்று, போதையில், பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட சந்தை புதுக்குப்பத்தைச் சேர்ந்த சத்யநாராயணன், 33; என்பவர் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

