/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுவையில் உலக தமிழர் மாநாடு: ஜூலை மாதம் நடத்த முடிவு
/
புதுவையில் உலக தமிழர் மாநாடு: ஜூலை மாதம் நடத்த முடிவு
புதுவையில் உலக தமிழர் மாநாடு: ஜூலை மாதம் நடத்த முடிவு
புதுவையில் உலக தமிழர் மாநாடு: ஜூலை மாதம் நடத்த முடிவு
ADDED : மார் 03, 2025 06:22 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜூலை இறுதி வாரத்தில், உலக தமிழர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க உள்ளனர்.
புதுச்சேரியில் உலக தமிழர் மாநாடு நடத்தப்படும் என, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டு துறை மேற்கொண்டது. ஜூலை மாதம் இறுதி வாரத்தில், 12வது உலக தமிழர் மாநாடு நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்து உள்ளது.
இது தொடர்பாக, உலக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின், இந்திய கிளை நிர்வாகிகள், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சபாநாயகர் செல்வம், கவர்னரின் செயலர் மணிகண்டன், கலை பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் உடனிருந்தனர்.
உலக தமிழர் மாநாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்தும், 5,000க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

