sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : மார் 31, 2024 04:44 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : ஏரிப்பாக்கம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் 25, ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெரு முகிலன் 25, என, தெரியவந்தது.

அவர்களிடம் சோதனை நடத்தியதில், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 1,200 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ், பீடி உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்கள், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us