sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்

/

மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்

மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்

மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்


ADDED : மே 14, 2024 05:18 AM

Google News

ADDED : மே 14, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து இயக்குமாறு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாலை போக்குவரத்து தொடர்பாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத மூன்றாம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு விவரம் VAHAN PORTALல் உடனடியாக கிடைக்கிறது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் இயக்குவது சட்டத்திற்கு முரண்பாடானது.

அமலாக்கத்துறை மற்றும் கள அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து, அபதாரங்கள் விதிப்பதுடன், உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முதன்முறை குற்றத்திற்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை, குற்றம் தொடர்ந்தால் ரூ.4000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us