ADDED : ஆக 29, 2024 07:24 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சேதராப்பட்டில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் குடிபோதையில், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன், வரதராஜ் நகரை சேர்ந்த சபரிமலை, 32; என்பது தெரியவந்தது. சபரிமலையை கைது செய்தனர்.
