ADDED : ஜூலை 23, 2024 12:09 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் சந்திப்பு அருகே நேற்று வாலிபர் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களிடம் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்தவர் பாண்டியன், 28; என தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர்.
