ADDED : ஜூலை 15, 2024 02:22 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரதாபன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது குண்டு சாலை பகுதியில், வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை திட்டி, ரகளையில் ஈடுபட்டார். அவரை, பிடித்து விசாரித்தனர். அவர் சுல்தான் பேட் பகுதியை சேர்ந்த முகமது நிஜார், 32, என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
