ADDED : ஏப் 29, 2024 04:03 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதிய பஸ் நிலையம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் மறைமலை அடிகள் சாலை, அந்தோணியார் கோவில் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் தெரிந்தால், 0413 - 2205657 எண்ணிற்கு தெரிவிக்கவும்.
