ADDED : ஆக 29, 2024 07:14 AM

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்கல்லுாரி விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காரைக்காலில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கல்லுாரியில் விளையாட்டு தின விழா இரண்டு நாட்கள் நடந்தது. இப்போட்டியை கல்லுாரி டீன் டாக்டர் திருமேனி துவக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு போட்டியில் பலர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் பஜன்கோவா டீன் டாக்டர் புஷ்பராஜு தலைமையில் நடந்தது.
இதில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி சிறப்பு விருந்தினராகவும்,முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை இணைப் பேராசிரியர் ஜெயசிவராஜன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
