sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு

/

சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு

சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு

சிகரெட் கடன் தராததால் ஆத்திரம்; கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு


ADDED : செப் 11, 2024 11:24 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : சிகரெட் கடன் தராததால் பெட்டி கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புகழரசி, 43. இவர் அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்த கிரேஷ், 25; பிரவின், 27; சகோதரர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி பெட்டி கடைக்கு சென்று, புகழரசியிடம் சிகரெட் கடனாக கேட்டனர். அவர் தராததால், ஆத்திரமடைந்த, இருவரும் நேற்று பூட்டியிருந்த பெட்டி கடை வாசலில், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர்.

கடை முன்பு தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து, புகழரசி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கிரேஷ், பிரவின் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us