தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு

வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு

வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 25, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : வேல்ராம்பட்டில் வீட்டில் மறைத்து வைத்து சாராயம் விற்றவரை, சம்பத் எம்.எல்.ஏ., போலீசுடன் சென்று பிடித்து கலால் துறையில் ஒப்படைத்தார்.

புதுச்சேரியில் 84 சாராய கடைகளில் அரசு அனுமதியுடன் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிளை கடை துவக்கி சாராயத்தை விற்பனை செய்கின்றனர். முதலியார்பேட்டையிலும் இதுபோல் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

சம்பத் எம்.எல்.ஏ., முதலியார்பேட்டை போலீசாரை அழைத்து கொண்டு, வேல்ராம்பட்டு சாலை, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடை மற்றும் அருகில் உள்ள வீட்டில் வைத்திருந்த ரூ. 1,200 மதிப்புள்ள சாராய பாட்டில்களை கைப்பற்றி போலீசார் மூலம் கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

சாராயத்தை வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த வேல்ராம்பட்டு சாலை, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சர்க்கரவர்த்தி, 67; என்பவர் மீது கலால் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us