sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்

/

இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்

இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்

இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்


ADDED : செப் 10, 2024 06:44 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இறந்தவர்களின் பெயர்களை நீக்க பொதுமக்களை அலைக்கழிப்பதா என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இறந்தவர்களின் பெயர் நீக்கம் சம்பந்தமான ஒரு அறிவிப்பை குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். அலுவலகத்திற்கு வந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ புதுச்சேரியில் உள்ள நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் அல்லது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளே உரிய சான்றிதழ் வழங்குவர். இறப்பு சான்றிதழ்கள் கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் பெற்றுக்கொள்வர்.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளால் வழங்கப்படக்கூடிய சான்றிதழை குடிமைப்பொருள் வழங்கல் துறை, தேர்தல் துறை, புள்ளி விவரத்துறை உள்ளிட்ட துறைகள் நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து பெற்று இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யலாம்.

இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்வதில் அரசே தனக்குள்ள சான்றிதழ்களின் அடிப்படையில் செய்யலாம்.

இதை விடுத்து இறந்தவர்களின் பெயரை எடுத்துக்கூற குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு பொதுமக்களை வரவழைப்பது மக்களுக்கு வீண் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த அறிவிப்பை துறையின் அமைச்சர் திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us