sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்

/

பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்

பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்

பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல் 4 பெண் போலீஸ் உட்பட 18 பேர் காயம்


ADDED : ஏப் 02, 2024 04:26 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார், : வடலுாரில் நேற்று காலை தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண் போலீசார் உட்பட 18 பேர் காயமடைந்தனர் .

கடலுாரில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு தனியார் பஸ் 30 பயணிகளுடன் விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. பஸ்சை, விஜயமா நகரத்தை சேர்ந்த டிரைவர் சரவணகுமார்,25; ஓட்டினார்.

பஸ் காலை 7:10 மணிக்கு வடலுார் சத்திய ஞான சபை அருகே பஸ் வந்தபோது, எதிரே பெண்ணாடத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. அதில், பஸ் மற்றும் லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ராமராஜன்,30; பஸ்சில் பயணம் செய்த பெண் போலீசார் ராகவி,28; சகிராபானு,27; மகாலட்சுமி, கவிப்பிரியா மற்றும் சக பயணிகள் மேட்டுக்குப்பம் பாஸ்கர், சேத்தியாத்தோப்பு அகிலா,35; வேலுார் குருப்பிரியா,18; உட்பட 18 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us