ADDED : ஏப் 29, 2024 04:18 AM

புதுச்சேரி, : புதுச்சேரி ரோட்டரி எலைட் சங்கம் சார்பில், இறகு பந்து போட்டி அப்துல்கலாம் உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
விழாவிற்கு, சங்கத் தலைவர் பிச்சைநாயகம் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர்கள் குமரன், திருமாறன், புகழேந்தி, வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இறுதி போட்டியில் ரோட்டரி கிளப் ஆப் டிவைன் சிட்டி, ரோட்டரி கிளப் ஆப் போனிக்ஸ் அணிகள் மோதியது. இதில் ரோட்டரி கிளப் ஆப் டிவைன் சிட்டி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவில், பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ரோட்டரி கிளப் ஆப் டிவைன் சிட்டி அணி வீரர்கள் முருகேசன், ரமணி ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை வழங்கினார்.
ஏற்பாடுகளை விளையாட் சங்கத் தலைவர் சேகர், அருள்மொழி, உறுப்பினர்கள் அழகப்பன், ராதாகிருஷ்ணன், மோகன்ராஜி, ஜெயக்குமார், விஜயகுமார், சுந்தர வரதன், கோவிந்தராஜீ ஆகியோர் செய்திருந்தனர்.
